பன்றிக்காய்ச்சல் காரணமாக அண்ணன்-தங்கைக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை


கோவையில் சமீப காலமாக பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மதுக்கரை பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவருக்கும் அவரது மனைவி மல்லிகாவுக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது அறியபட்டு இருவரும் மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். 

இந்த நிலையில், அவர்களது மகன் சந்தான கிருஷ்ணன் (27) மற்றும் மகள் மரகதம் (25) ஆகியோருக்கு கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, இருவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது  தெரியவந்தது. தொடர்ந்து, அண்ணன் தங்கை இருவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு தாய், தந்தை மரணமடைந்த நேரத்தில், அவர்கள் பிள்ளைகளுக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதையறிந்த மதுக்கரை பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...