பன்றிக்காய்ச்சல் காரணமாக அண்ணன்-தங்கைக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை


கோவையில் சமீப காலமாக பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மதுக்கரை பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவருக்கும் அவரது மனைவி மல்லிகாவுக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது அறியபட்டு இருவரும் மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். 

இந்த நிலையில், அவர்களது மகன் சந்தான கிருஷ்ணன் (27) மற்றும் மகள் மரகதம் (25) ஆகியோருக்கு கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, இருவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது  தெரியவந்தது. தொடர்ந்து, அண்ணன் தங்கை இருவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு தாய், தந்தை மரணமடைந்த நேரத்தில், அவர்கள் பிள்ளைகளுக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதையறிந்த மதுக்கரை பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...