கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் கோவை பெரியகுளத்தினை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்


கோவை மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்படாமல் முற்றிலும் சிதிலமடைந்து  காணப்படுகிறது. சரியான பராமரிப்பு இன்மை, சீமைக் கருவேளமரங்கள்  அதிகரிப்பு, ஆகாயத் தாமரை உள்ளிட்டவையால் கோவை மாவட்டத்தில் பல குளங்கள் இருந்ததற்கான சாட்சியங்களே இல்லாத அளவுக்கு அழிந்துபோய்விட்டன.

அவ்வாறாக தற்போது அழிந்துவரும் குளங்களை மீட்டெடுக்கும் வகையில் கோவையில் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் சமூக வளைதலங்கள் மூலம் ஒன்றிணைந்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என ஒரு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.



இவ்வமைப்பின் சார்பில் இன்று கோவை பேரூரில் அமைந்துள்ள பெரியகுளத்தினை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் சுமார் 15 ஏக்கருக்கும் மேல் குளத்துப் பகுதியில் வளர்ந்திருந்த சீமைகருவேள மரங்கள், புதர்செடிகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது. இவர்களுக்கு உறுதுணையாக மூன்று ஜே சி பி இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது.

இதுகுறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி  உள்ள குளங்களை மீட்டெடுக்கும் வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரந்தோறும் ஞாயிறன்று மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குளங்களுக்குச் சென்றும் குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மை செய்யப்பட்டு பராமரிக்கப்படும்.

தற்போது இந்த அமைப்பில் 150 பேர் இணைந்து இன்று பேரூர் பெரியகுளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டோம். இதில் 15 ஏக்கரில் இருந்த சீமைகருவேள மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதமுள்ள மரங்களை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதில், மேலும் சில தன்னார்வ நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு தேவையான நிதிவுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...