கோவை ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கல் விழா சிறப்பு பூஜை - 4 டன் கரும்புகளால் கோவில் நடை அலங்காரம்

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கலையொட்டி கோவில் முகப்பில் 4 டன் கரும்புகளை கொண்டு செய்யப்பட்டுள்ள அலங்காரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


கோவை: உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை அனைத்து தமிழர்களால் மகிழ்ச்சியுடன் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் காலையில் சூரிய பொங்கல் வைத்து கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கல் தினத்தை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.



இதில், அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.



மேலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு கோவில் முகப்பு மற்றும் கோவில் நடை முழுவதும் சுமார் 4 டன் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களை வழங்கி வழிபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...