கோவை ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கல் விழா சிறப்பு பூஜை - 4 டன் கரும்புகளால் கோவில் நடை அலங்காரம்

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கலையொட்டி கோவில் முகப்பில் 4 டன் கரும்புகளை கொண்டு செய்யப்பட்டுள்ள அலங்காரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


கோவை: உலகம் முழுவதும் பொங்கல் பண்டிகை அனைத்து தமிழர்களால் மகிழ்ச்சியுடன் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் காலையில் சூரிய பொங்கல் வைத்து கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.

அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் பொங்கல் தினத்தை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.



இதில், அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.



மேலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு கோவில் முகப்பு மற்றும் கோவில் நடை முழுவதும் சுமார் 4 டன் கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் உட்பட பல்வேறு பொருட்களை வழங்கி வழிபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...