கேரளாவில் ஒருவரை தாக்கி கொலை செய்த புலி - மயக்க ஊசி செலுத்தி பிடித்த வயநாடு வனத்துறை..!

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஒருவரை தாக்கி கொலை செய்துவிட்டு போக்கு காட்டி வந்த புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளார்.


கேரளா: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியில் நேற்று முன்தினம் புலி ஒன்று தாக்கி கொலை செய்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்தப் புலியை உடனடியாக பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் ஆட்கொல்லி புலியை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகளை அமைத்திருந்தனர். ஆனால் கூண்டில் புலி சிக்காத நிலையில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வயநாடு வனத்துறையினர் புலியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குப்பாடிரா பகுதியில் பதுங்கி இருந்த புலிக்கு வனத்துறையினர் மயக்க ஊசியை செலுத்தினர்.



அதனையடுத்து அந்த புலி மயங்கிய நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் அங்கும் இங்குமாக சுற்றியது.



நீண்ட நேரத்திற்கு பின் மயங்கி கீழே படுத்ததை அடுத்து அந்த புலி பிடிக்கபட்டு வயநாட்டில் உள்ள வன விலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த பிடித்த நிலையில் மாணந்தவாடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...