திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசம்.


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடித் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பகுதியில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் காருண்யா கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் பின்னலாடை நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பின்னலாடை நிறுவனத்தின் மேல் தளத்தில் பின்னலாடையை பேக்கிங் அயனிங் செய்யும் தளம் உள்ளது. கீழ்த்தளத்தில் பின்னலாடைக்குத் தேவையான ரோல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்கசிவினால், பின்னலாடை பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், பின்னலாடை நிறுவனத்தின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.



பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. பின்னலாடை நிறுவனத்தில் தீப்பிடித்த சம்பவம் குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...