திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசம்.


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடித் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பகுதியில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் காருண்யா கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் பின்னலாடை நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பின்னலாடை நிறுவனத்தின் மேல் தளத்தில் பின்னலாடையை பேக்கிங் அயனிங் செய்யும் தளம் உள்ளது. கீழ்த்தளத்தில் பின்னலாடைக்குத் தேவையான ரோல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்கசிவினால், பின்னலாடை பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், பின்னலாடை நிறுவனத்தின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.



பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. பின்னலாடை நிறுவனத்தில் தீப்பிடித்த சம்பவம் குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...