திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசம்.


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் இயங்கி வந்த பின்னலாடை நிறுவனத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடித் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பகுதியில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் காருண்யா கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு முதல் பின்னலாடை நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

பின்னலாடை நிறுவனத்தின் மேல் தளத்தில் பின்னலாடையை பேக்கிங் அயனிங் செய்யும் தளம் உள்ளது. கீழ்த்தளத்தில் பின்னலாடைக்குத் தேவையான ரோல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்கசிவினால், பின்னலாடை பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், பின்னலாடை நிறுவனத்தின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை 5 மணி நேரத்துக்கு மேலாகப் போராடி தீயை அணைத்தனர்.



பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் எரிந்து நாசமாகின. பின்னலாடை நிறுவனத்தில் தீப்பிடித்த சம்பவம் குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...