உதகையில் பூச்சி கொல்லி மருந்து (Hit) வெடித்து இருவர் படுகாயம் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

உதகையில் குளிர் காய்ந்த போது பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பதை பதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது உறைபனி காலம் என்பதால் மாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இதனால் மாலை நேரங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி தீ மூட்டி குளிர் காய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தாவரவியல் பூங்கா அருகே நேற்று முன்தினம் இரவு சிலர் குளிருக்கு தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் அட்டை பெட்டிக்குள் எளிதில் தீப்பற்ற கூடிய பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) இருப்பது தெரியாமல் தீயில் போட்டுள்ளார்.

இதனிடையே அட்டைப்பெட்டி நன்றாக எரிந்து கொண்டிருந்த நிலையில், அதில் இருந்த பூச்சிகொல்லி மருந்து டப்பா அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு குளிர் காய்ந்து கொண்டிருந்த வியாபாரி நந்து மற்றும் சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த சம்பவத்தில், சங்கர் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக தப்பிய நிலையில் நந்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஹிட் டப்பா வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...