உதகையில் பூச்சி கொல்லி மருந்து (Hit) வெடித்து இருவர் படுகாயம் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!

உதகையில் குளிர் காய்ந்த போது பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில், பதை பதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது உறைபனி காலம் என்பதால் மாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை கடுமையான குளிர் நிலவி வருகிறது.

இதனால் மாலை நேரங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி தீ மூட்டி குளிர் காய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தாவரவியல் பூங்கா அருகே நேற்று முன்தினம் இரவு சிலர் குளிருக்கு தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் அட்டை பெட்டிக்குள் எளிதில் தீப்பற்ற கூடிய பூச்சி கொல்லி மருந்து டப்பா (Hit) இருப்பது தெரியாமல் தீயில் போட்டுள்ளார்.

இதனிடையே அட்டைப்பெட்டி நன்றாக எரிந்து கொண்டிருந்த நிலையில், அதில் இருந்த பூச்சிகொல்லி மருந்து டப்பா அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அங்கு குளிர் காய்ந்து கொண்டிருந்த வியாபாரி நந்து மற்றும் சங்கர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



இந்த சம்பவத்தில், சங்கர் லேசான காயத்துடன் அதிஷ்டவசமாக தப்பிய நிலையில் நந்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஹிட் டப்பா வெடித்து சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...