பல்லடம் பகுதியில் மினி ஜவுளி பூங்கா - உற்பத்தியாளர்கள் வரவேற்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டார பகுதியில் அமையவுள்ள மினி ஜவுளி பூங்கா திட்டத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வரவேற்பு.


திருப்பூர்: திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளருடனான திட்ட விளக்கக் கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்திற்கு இந்திய ஜவுளி அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார்.



இதில், தமிழகம் முழுவதும் மினி ஜவுளி பூங்காக்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பின் தங்கிய கிராமங்களை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். பல்லடம், பொங்கலூர், குண்டடம், சுல்தான்பேட்டை, குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மினி ஜவுளி பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு அளிக்கும் மானியங்கள் மூலம் தொழிலை மேம்படுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஐந்து கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள், 2.5 கோடி பங்களிப்பைச் செலுத்த வேண்டும். மூன்று தொழில் நிறுவனங்கள் இணைந்து, 2 ஏக்கர் நிலத்தில் மினி ஜவுளி பூங்கா அமைக்கலாம். கட்டட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், மானியத்துடன் இயந்திரங்களும், நிறுவுவதற்கான திட்டங்களும் உள்ளன.



இத்திட்டம் நிறைவேறினால், தரமான துணிகளைக் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கும் என இந்த திட்ட விளக்கக் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர் ராமலிங்கம், மண்டல துணை இயக்குநர் ராகவன் மற்றும் திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.



பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜவுளி அமைப்பின் துணைத் தலைவர் சக்திவேல், ஜவுளி பூங்கா திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தொழில் வளர்ச்சி அடையும். அண்டை நாடுகளுடன் போட்டிப் போட்டு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகும்.

இத்திட்டத்தால், சிறு குறு தொழில் துறையினர் பயனடைவதுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், முதன்முதலாக பல்லடத்துக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...