வால்பாறை அருகே தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - 6 வீடுகள் எரிந்து நாசம்!

வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் எரிந்து, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம். தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்ப்பு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேடுகள் உள்ளன. இங்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



அப்போது வேலம்மாள் என்பவர் வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த சிலர், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்



தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், தீ வேகமாகப் பரவியதால், தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.



பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஆறு வீடுகள் எரிந்து சேதமாகியது.



இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.



தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.



தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...