வால்பாறை அருகே தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ விபத்து - 6 வீடுகள் எரிந்து நாசம்!

வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு வீடுகள் எரிந்து, பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம். தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்ப்பு.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 62 எஸ்டேடுகள் உள்ளன. இங்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தங்கி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



அப்போது வேலம்மாள் என்பவர் வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த சிலர், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்



தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள், தீ வேகமாகப் பரவியதால், தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர்.



பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஆறு வீடுகள் எரிந்து சேதமாகியது.



இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.



தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.



தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...