எடப்பாடி பழனிசாமியை விட எஸ்.பி வேலுமணி சிறந்தவர் - புகழேந்தி புகழாரம்

அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காட்டிலும் எஸ்.பி வேலுமணியே சிறந்தவர் என அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றம் வழக்குகளை ஒருவார காலம் தெளிவாகக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். நாளைய தீர்ப்பைச் சரித்திரம் சொல்லும். உன்னதமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்திலிருந்து கிடைக்கப் பெறுவோம்.

ஓபிஎஸ் தான் இந்த கழகத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்கின்ற தீர்ப்பு நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திலிருந்து வரும் என்கின்ற நம்பிக்கை தங்களிடத்தில் மிகத் தெளிவாக உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியைக் காட்டிலும் எஸ்.பி.வேலுமணி தான் 100சதவீதம் சிறந்தவர். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கருப்பு சட்டை அணிந்து செல்லும் போது, அவராவது ஈபிஎஸ்-க்கு புத்திச்சொல்ல வேண்டுமல்லவா? அல்லது பொன்னையன் ஆவது சொல்ல வேண்டும் அல்லவா, என வினவினார். மேலும் எடப்பாடி அணியில் இருக்கக்கூடியவர்கள் அறிவை அடைமானம் வைத்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...