பல்லடம் அருகே பணம் கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளர் கைது

பல்லடம் அருகே பணிபுரியும் இடத்தில் ரூ.9 லட்சம் பணத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரம் கருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வி.



இவர் சுவாதி லட்சுமி என்ற பெயரில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார்.

இவரது நிறுவனத்தில் பள்ளபாளையத்தைச் சேர்ந்த ஆண்டனி பெர்னார்ட் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். டிரான்ஸ்போர்டில் சரக்குகளை ஏற்றுவது, வாடகை வசூலிப்பது மற்றும் டெக்ஸ்டைல்ஸில் தயாரான துணிகளை விற்பனை செய்வது என நிர்வாகம் முழுவதையும் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நிறுவனத்திற்கு வரும் பணத்தில் ரூ.9 லட்சத்தைக் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனையடுத்து தாமரைச்செல்வி அளித்த புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆண்டனி பெர்னார்ட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...