வாடிவாசல் படத்தின் பெயரில் மோசடி - கோவை இளைஞர்களிடம் பணம் வசூல்!

கோவையில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புத் தருவதாகக் கூறி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் ஒரு கும்பல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுவருவதாகப் புகார் எழுந்துள்ளது.


கோவை: கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து வாடிவாசல் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விகிரியேஷன் தயாரிப்பில் எடுக்கப்படவுள்ள இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில், கோவையில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு கிராமப்புற தோற்றத்தில் நடிக்க ஆட்கள் தேர்வு நடைபெறுவதாகக் கூறி, நபர் ஒருவருக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுப்பதாக பேசும் இளைஞர் பெயர் தமிழ்ச்செல்வன் என்றும், பதிவுக்கட்டணம் ரூ.2000 ஆயிரத்தை ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிற்கு அனுப்புமாறு அவர் கூறி பண வசூலில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படவாய்ப்பைப் பெற 9345268651 என்ற எண்ணில் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் என்ற விளம்பரத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். வாட்ஸ் ஆப்பில் வந்த விளம்பரங்களைப் பார்த்து, கோவை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலர் இந்த மோசடி கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்துவருவதாகத் தெரிகிறது.

இந்த மோசடி தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, நூதன முறையில் பண வசூலில் ஈடுபட்டுவரும் மோசடி நபர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...