'அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை தேவை..!' - கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு!

கோவையில் தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.



கோவை: கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.



சங்கத்தின் செயலாளர் அன்னம் திருநாவுக்கரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில், சுரேஷ் என்பவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து, தங்கள் சங்கம் பற்றியும் சங்க நிர்வாகிகள் பற்றியும் அவதூறு பதிவுகளை பதிவிட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தனர்.



இதுகுறித்து பலமுறை நேரிலும் காவல்நிலையம் வாயிலாகவும் அறிவுரை வழங்கியும் அவர் கேட்க மறுப்பதாகவும், எனவே, அவதூறு பரப்பும் நபர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, தங்களது பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அந்த மனுவில் மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கோவை மாவட்ட மருந்து வணிகளர் சங்க பொருளாளர் ராமச்சந்திரன் கூறியதாவது:



தங்களது சங்கத்தில் கடந்து ஒரு வருடத்திற்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. அதில் தங்கள் அணி வெற்றி பெற்றது. தனக்கு எதிராக பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஷ் என்பவர் தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தினால் சங்கத்தின் மீதும், சங்க நிர்வாகிகள் குறித்தும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்.

இதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளோம். கோவை மருந்து வணிகர் சங்கம் தற்போது சுகாதாரத்துறை ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அவற்றை தடுக்கின்ற விதமாகவும் சுரேஷ் செயல்பட்டு வருகிறார். அவர்மீது காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...