திருப்பூர் ஓடை புறம்போக்கில் சடலத்தைப் புதைக்க முயற்சி? - அதிகாரிகள் விசாரணை

பல்லடம் அருகே ஓடை புறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அலுவலகம் எதிரே ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த நிலம் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஓடை புறம்போக்கு நிலத்தில் சிலர் குழி தோண்டி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப்பார்த்த அப்பகுதிவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், எதற்காக குழி தோண்டுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, அதற்கு அந்த நபர்கள், சடலத்தை அடக்கம் செய்வதற்கு குழிதோண்டச் சொன்னதாகவும், அதற்காகத் தோண்டுவதாகவும் தெரிவித்தனர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள், இந்த விவகாரம் தொடர்பாக, பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், குழி தோண்டியவர்களிடம் விசாரணை நடத்தினர்.



அப்போது, சடலம் புதைப்பதற்காகத்தான் அந்தக் குழி தோண்டப்பட்டது என்பதும், கூலிக்காக இந்தச் செயலை அவர்கள் செய்திருப்பதும் தெரியவந்தது. குழி தோண்டக் கூறிய நபர்கள் யார் என்பது குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஓடைபுறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...