திருப்பூர் ஓடை புறம்போக்கில் சடலத்தைப் புதைக்க முயற்சி? - அதிகாரிகள் விசாரணை

பல்லடம் அருகே ஓடை புறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அலுவலகம் எதிரே ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த நிலம் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஓடை புறம்போக்கு நிலத்தில் சிலர் குழி தோண்டி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப்பார்த்த அப்பகுதிவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், எதற்காக குழி தோண்டுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, அதற்கு அந்த நபர்கள், சடலத்தை அடக்கம் செய்வதற்கு குழிதோண்டச் சொன்னதாகவும், அதற்காகத் தோண்டுவதாகவும் தெரிவித்தனர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள், இந்த விவகாரம் தொடர்பாக, பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், குழி தோண்டியவர்களிடம் விசாரணை நடத்தினர்.



அப்போது, சடலம் புதைப்பதற்காகத்தான் அந்தக் குழி தோண்டப்பட்டது என்பதும், கூலிக்காக இந்தச் செயலை அவர்கள் செய்திருப்பதும் தெரியவந்தது. குழி தோண்டக் கூறிய நபர்கள் யார் என்பது குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஓடைபுறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...