திருப்பூர் ஓடை புறம்போக்கில் சடலத்தைப் புதைக்க முயற்சி? - அதிகாரிகள் விசாரணை

பல்லடம் அருகே ஓடை புறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அலுவலகம் எதிரே ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த நிலம் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஓடை புறம்போக்கு நிலத்தில் சிலர் குழி தோண்டி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப்பார்த்த அப்பகுதிவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், எதற்காக குழி தோண்டுகிறீர்கள்? எனக் கேட்டதற்கு, அதற்கு அந்த நபர்கள், சடலத்தை அடக்கம் செய்வதற்கு குழிதோண்டச் சொன்னதாகவும், அதற்காகத் தோண்டுவதாகவும் தெரிவித்தனர்.



இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பகுதிமக்கள், இந்த விவகாரம் தொடர்பாக, பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், பல்லடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், குழி தோண்டியவர்களிடம் விசாரணை நடத்தினர்.



அப்போது, சடலம் புதைப்பதற்காகத்தான் அந்தக் குழி தோண்டப்பட்டது என்பதும், கூலிக்காக இந்தச் செயலை அவர்கள் செய்திருப்பதும் தெரியவந்தது. குழி தோண்டக் கூறிய நபர்கள் யார் என்பது குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஓடைபுறம்போக்கு நிலத்தில் சடலத்தை புதைக்க குழி தோண்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...