ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள்


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (NOVACEST) நோவாசெஸ்ட் விழா மற்றும் SKAவினாடிவினா போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் சிறப்புரையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு நேரம், காலம் எண்ணாது, வகுப்பறை, பொது இடங்கள் என்றச் சூழல் கருதாது (E-Learning) இருபத்துநான்கு மணிநேரமும் படிக்கலாம் என்ற இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையாகிய (Online) வசதி வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அத்தகைய வாய்ப்பினை முறையான வகையில் மாணவர்கள் பயன்டுத்த வேண்டும் என்று கூறினார். 



கல்லூரி முதல்வர் ராதிகா மாணவர்களுக்கு உலகம் முழுவதும் கணினியுடன் நேரடித் தொடர்புடைய வசதிகள் சிதறிக் கிடக்கின்றன. கிடைக்கும் வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்துவதில்லை, எல்லோரும் அதனைப் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என தனது உரையில் கூறினார். SKA வினாடிவினா போட்டி  (Online) இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கிடையே நடைபெற்றது. இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு சுழற்கோப்பையும் ரூபாய் 3000 பணப்பரிசாகவும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பி.வி.பி பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. (NOVACEST) நோவாசெஸ்ட் விழாவில் பல்வேறு போட்டிகள் நடைப் பெற்றன. கணினி அறிவியல், வணிகவியல், கணிதம் ஆகிய துறைகளில், துறை வாரியாகக் கருத்தரங்குகள், வினாடிவினா, வர்த்தகம், வார்த்தை விளையாட்டு எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு முதல் பரிசு ரூபாய் 500, இரண்டாம் பரிசு ரூபாய் 300 எனப் பணப்பரிசும், மூன்றாம் பரிசு சான்றிதழுமாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவியர்க்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...