ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள்


ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (NOVACEST) நோவாசெஸ்ட் விழா மற்றும் SKAவினாடிவினா போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தரராமன் சிறப்புரையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு நேரம், காலம் எண்ணாது, வகுப்பறை, பொது இடங்கள் என்றச் சூழல் கருதாது (E-Learning) இருபத்துநான்கு மணிநேரமும் படிக்கலாம் என்ற இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையாகிய (Online) வசதி வாய்ப்புகள் பெருகியிருக்கின்றன. அத்தகைய வாய்ப்பினை முறையான வகையில் மாணவர்கள் பயன்டுத்த வேண்டும் என்று கூறினார். 



கல்லூரி முதல்வர் ராதிகா மாணவர்களுக்கு உலகம் முழுவதும் கணினியுடன் நேரடித் தொடர்புடைய வசதிகள் சிதறிக் கிடக்கின்றன. கிடைக்கும் வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்துவதில்லை, எல்லோரும் அதனைப் பயன்படுத்திப் பயன்பெற வேண்டும் என தனது உரையில் கூறினார். SKA வினாடிவினா போட்டி  (Online) இணையதளத்துடன் இணைந்துள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கிடையே நடைபெற்றது. இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசாக ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர்களுக்கு சுழற்கோப்பையும் ரூபாய் 3000 பணப்பரிசாகவும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பி.வி.பி பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது. (NOVACEST) நோவாசெஸ்ட் விழாவில் பல்வேறு போட்டிகள் நடைப் பெற்றன. கணினி அறிவியல், வணிகவியல், கணிதம் ஆகிய துறைகளில், துறை வாரியாகக் கருத்தரங்குகள், வினாடிவினா, வர்த்தகம், வார்த்தை விளையாட்டு எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்க்கு முதல் பரிசு ரூபாய் 500, இரண்டாம் பரிசு ரூபாய் 300 எனப் பணப்பரிசும், மூன்றாம் பரிசு சான்றிதழுமாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ மாணவியர்க்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...