காங்கேயம் அருகே கோவில் உண்டியல், நகைகளை திருடிவிட்டு பொருட்களுக்கு தீவைப்பு

காங்கேயம் அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவில் உண்டியல் மற்றும் அம்மன் சிலையில் இருந்த 2 சவரன் நகையை திருடிவிட்டு, கோவிலில் இருந்த பொருட்களுக்கு தீவைத்த மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த காட்டுப்பாளையம் பகுதியில், பிரசித்தி பெற்ற புத்துக்கண் ஸ்ரீ நாகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்நிலையில், அந்த கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் நாகராஜன், கோவிலை இன்று காலை திறந்து பார்த்தபோது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மற்றும் சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தாலிச் செயினும் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.



மேலும் கோவிலில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் ஐயப்பன் கோவிலுக்கு செல்ல வேண்டிய பக்தர்கள் இருமுடி கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருப்பூர் நாகாத்தம்மன் கோவிலில் கொள்ளை அடிக்கப்பட்டு கோவில் பொருட்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...