திருப்பூர் குமரன் 91வது நினைவுநாள் - உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை

சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 91வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மலர் மரியாதை செய்தனர்.



கோவை: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று இன்னுயிர் ஈந்த தலைவர்களில் ஒருவரான திருப்பூர் குமரனின் 91வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.



இதையொட்டி, திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தியாகி குமரனின் திருவுருவ சிலைக்கு மாநகராட்சி மேயர் தினேஷ் குமார், காங்கிரஸ் கமிட்டியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனைத் தொடர்ந்து குமரன் சாலையில் உள்ள தியாகி குமரன் உயிர் நீத்த இடத்திலும் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பள்ளிக் குழந்தைகளும் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...