கோவையில் கார் பார்க்கிங் திட்டம் - மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!

கோவையில் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பாக வல்லுநர் குழுவுடன் மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் ஆலோசனை நடத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சியில் கார் பார்க்கிங் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றுவது தொடர்பாக காவல்துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடான ஆலோசனை கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆர்.எஸ்.புரம் மற்றும் பந்தைய சாலை உள்ளிட்ட இரண்டு இடங்களிலும் மற்றும் அதன் அருகில் உள்ள சாலைகளிலும் வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடர்பாக வல்லுநர் குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.புரம், பந்தைய சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் அமைப்பது, அதற்கான கட்டணம் நிர்ணயம் செய்வது, வாகனங்களை எவ்வாறு எந்தெந்த இடங்களில் நிறுத்துவது, அதற்கான இடங்களை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சோதனை ஓட்ட முறையில் வாகன நிறுத்துமிடம் எந்தெந்த பகுதிகளில் அமைப்பது என்பது குறித்து மாநகர காவல் ஆணையர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர்களுடன் களஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

அதேபோல, கோவை மாநகராட்சியில் தேங்கும் கட்டடக்கழிவுகளை அகற்றுதல், கட்டடக்கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான கட்டணத்தை நிர்ணயம் செய்தல், நாள்தோறும் 100 டன் அளவிற்கு கட்டடக்கழிவுகளை அகற்றுதல், அதனை மறுசுழற்சி முறையில் சிமெண்ட், செங்கல், எம்சேன்ட், டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களை தயாரித்தல், இதற்கான ஒப்பந்தம் வருகின்ற ஜனவரி 24ம் தேதி நடைபெறவுள்ளது.

ஒப்பந்தம் தொடர்பான கருத்துக்கேட்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனான ஆலோசனையும் இந்தக் கூட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 24ம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்ட பின்னர், பணியை எவ்வாறு செய்வது என்பது குறித்து விரிவாக தகவல்கள் தெரிவிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.



இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, காவல்துறை துணை ஆணையர் போக்குவரத்து மதிவாணன், மாநகரப்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கர், ஹேமலதா, மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...