கோவை கார் வெடிப்பு வழக்கு - 4 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை!

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான கைதானவர்களில் 4 பேரிடம் தேசிய புனலாய்வு முகமை அதிகாரிகள் நள்ளிரவில் விசாரணை நடத்தினர்.



கோவை: கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜமிஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தீவிரவாத நோக்குடன் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதல் என கருதப்படும் இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே கைதானவர்களில் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்திருந்திருந்தனர்.

இந்நிலையில், முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தௌபிக், சனாபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை காவலில் எடுத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அவர்களை சென்னையில் வைத்து விசாரித்த பின்பு நேற்று காலை கோவைக்கு அழைத்து வந்து காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து மீண்டும் விசாரணை நடத்தினர்.



இதனைத் தொடர்ந்து, கோவை அழைத்துவரப்பட்ட 6 பேரில், சனாபர் அலி, முகமது ரியாஸ்,நவாஸ், தௌபிக் ஆகிய 4 பேர் மட்டும் நள்ளிரவு 11.30மணி அளவில் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபின் இல்லத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பின் எஸ்.பியான ஸ்ரீஜித் தலைமையில் அழைத்துவரப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், ஜமீஷா முபீனின் வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்தும் 4 பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அப்போது விசாரணை மேற்கொண்டனர்.



பின்னர், 4 பேரையும், உக்கடம் பகுதியில் உள்ள சனாபர் அலியின் வீடு மற்றும் ஜி. எம். பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதோடு, அனைத்து விசாரணையையும் வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக கைதான 4 பேரை, நள்ளிரவில் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...