வாரிசு படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை?- பல்லடத்தில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளால் வாட்ஸ் ஆப்பில் வாரிசு பட டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் நாளை தமிழகம் முழுவதும் ரீலிஸ் ஆகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் நாளை வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது.



இத்திரைப்படத்தின் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் 550 ரூபாய்க்குக் கிடைக்கும் என விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தகவல்கள் பரபரப்பட்டு, தற்போது வாட்ஸ் ஆப்பில் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டை அதிக விலைக்கு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளே விற்பனை செய்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



மேலும் வாரிசு திரைப்படத்தின் டிக்கெட்டை வாட்ஸ் ஆப்பில் அதிக விலைக்கு விற்பனை செய்து வரும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீதும், திரையரங்கு மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...