பணி நிரந்தரம் செய்யுங்கள்..! - உதகை தாவரவியல் பூங்கா முன்பு தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் போராட்டம்

உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு தோட்டக்கலைத்துறை பூங்காக்கள் மற்றும் அரசு பண்ணைகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா உள்ளிட்ட அரசு பூங்காக்கள் மற்றும் குன்னூர் பழபண்ணை, நஞ்சநாடு பண்ணை உள்ளிட்ட 14 தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் 700-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இவர்களுக்குத் தினக் கூலியாக நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் மட்டுமே பெற்று பணப் பலன்கள் இன்றி பணியாற்றி வருகின்றனர்.



இதனையடுத்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி பணப் பலன்களை பிடித்தம் செய்ய வேண்டும், பணி மூப்பு அடிப்படையில் ஊக்கத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும், காலியாக உள்ள இடங்களைத் தற்காலிக பணியாளராக உள்ள தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப நிரப்ப வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு நிதித்துறை ஆணைபடி தற்போது உள்ள தொழிலாளர்களைப் பண்ணை பணியாளர்களை அங்கீகாரிக்க வேண்டும்.



உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு பூங்கா மற்றும் பண்ணை தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது தமிழக அரசு உடனே தங்களது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...