20 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம், வால் வீச்சு - கோவை சிறுவன் உலக சாதனை

கோவையைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ரித்விக் பிரனவ் தொடர்ந்து 20 மணி நேரம் சிலம்பம் சுற்றியும், வால் வீச்சு செய்தும் உலக சாதனை படைத்துள்ளார்.


நீலகிரி: கோவையைச் சேர்ந்த வேலுச்சாமி- சாந்தி தம்பதியின் 11 வயது மகன் 11 வயது சிறுவன் ரித்விக் பிரனவ். இவர் கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தொடர்ந்து 20 மணிநேரம், தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தில் நெடுங்கம்பு, நடுக்கம்பு சுற்றியும், ஆயுதப் பிரிவுகளான வால் வீச்சு, சுருள் வால் வீச்சு, வேல் கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு மற்றும் வாள் கேடயம் ஆகியவற்றை சுற்றி உலக சாதனை படைத்துள்ளார்.



இந்த சாதனையை சாதனையை இந்தியா புக் ஆப் வோர்ல்ட் ரெகார்ட்ஸ், அமெரிக்கன் புக் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்ஸ் மற்றும் யுரோப்பியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை அமைப்பினர் அங்கிகரித்துள்ளனர்.



இதுகுறித்து, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:

2023ம் ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக, இந்த உலக உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், அமேரிக்கன் உலக ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பினர், யூரேப்பியன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் என மூன்று நிறுவனங்கள் இதனை அங்கீகரித்துடன், மாணவனின், சாதனையை, பாராட்டி சான்றிதல்களையும், கோப்பைகளையும், மெடல்களையும் வழங்கி பெருமைபடுத்தியுள்ளது.



இது குறித்து பேசிய சிறுவன் ரித்விக் பிரனவ், கடந்த 6 ஆண்டாக சிலம்பம் பயின்று வருவதாகவும், பொங்கல் திருவிழாவை வரவேற்கும் விதமாக இந்த சாதனையை செய்ததாக கூறினார்.

முன்னதாக, நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதாம் ஹுசைன், இந்திய உணவுக் கழகத்தின் முன்னாள் ஆலோசனை குழு உறுப்பினர் உதய் தீப், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் இந்திய தரக்கட்டுப்பாடு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் சாதனை படைத்த மாணவனுக்கு சான்றிதல்களையும், கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், முல்லை தற்காப்பு கலை அமைப்பின், மேளாளர், கார்த்திக், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும், கலந்து கொண்டு, சாதனை படைத்த மாணவர்களுக்கு, பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Newsletter

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...