நீலகிரியில் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கபட்டன.



நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் 739 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களையும், 599 பயனாளிகளுக்கு ரூ.15.64 இலட்சம் மதிப்பில் கல்வி, திருமணம், ஓய்வூதியம், இயற்கை மரணம் உதவித்தொகை என மொத்தம் 1,338 பயனாளிகளுக்கு ரூ.27.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.



பின்னர் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,

தொழிலாளர் துறையின் கீழ் 18 தொழிலாளர் நலவாரியங்கள் செயலபட்டு வருகின்றன. அனைத்து மக்களுக்கும் அரசு நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.

பெண் ஆட்டோ தொழிலாளர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 இலட்சம் மானியம் வழங்க வழிவகையும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகையும், திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, பதிவு பெற்ற தொழிலாளி இயற்கை மரணம் அடைந்தால் இயற்கை மரண நிதி உதவி,

பதவி பெற்ற தொழிலாளி விபத்தின் காரணமாக விபத்து ஊனம் ஏற்பட்டால் அதற்கான உதவித்தொகை, கண் கண்ணாடி உதவித்தொகை, 60 வயது நிறைவுபெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒய்வூதியம், விபத்து ஏற்பட்டு விபத்து ஊனம் ஏற்படும் நிகழ்வுகளில் முடக்கு ஒய்வுதியம் ஆகியவைகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அம்ரித், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் தலைவர் பொன்குமார், தொழிலாளர் இணை ஆணையர் (ஈரோடு) சசிகலா, உதகை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் (எ) மாதன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லெனின் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...