கோவை கிணத்துக்கடவு அருகே சுடிதார் அணிந்து வீடு வீடாக சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமி - வைரல் வீடியோ..!

கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து சென்று செருப்பு திருடும் மர்ம ஆசாமியின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மை காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செருப்புகள் காணாமல் போனதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேரமா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் கடந்த 2ம் தேதி இரவு பதிவான காட்சிகள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.



அந்த சிசிடிவி காட்சியில் நள்ளிரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் வீட்டு வாசலில் உள்ள செருப்புகளை எடுத்து செல்வதும், கண்காணிப்பு கேமராவை கண்டதும் முகத்தை மறைத்துக் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.



இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு, மர்ம ஆசாமி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...