உடலுக்கு வலுவூட்டும் 555 சிறுதானிய உணவுகள் - கோவையில் தொடங்கியது சிறுதானிய மாநாடு!

கோவையில் தமிழ்நாடு சிறுதானிய மாநாட்டை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். சிறுதானியங்கள் மூலம் 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.



கோவை: கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிர்மலா கல்லூரியில் தமிழ்நாடு சிறுதானிய மாநாடு - 2023 இன்று துவங்கியது.



இந்த மாநாட்டை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார். மாநாட்டில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் சிறுதானிய உணவுகள், உணவு பொருட்கள், சிறுதானியம், மருத்துவ குணம் சார்ந்த புத்தகங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.



மேலும் 7 சிறுதானியங்களை கொண்டு 555 வகையான சிறுதானிய உணவுகளை தயாரித்து, உணவு கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதில் சிறுதானியங்களை கொண்டு 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



இதைத் தொடர்ந்து கல்லூரி கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், சித்த மருத்துவர் சிவராமன், கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...