உடலுக்கு வலுவூட்டும் 555 சிறுதானிய உணவுகள் - கோவையில் தொடங்கியது சிறுதானிய மாநாடு!

கோவையில் தமிழ்நாடு சிறுதானிய மாநாட்டை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். சிறுதானியங்கள் மூலம் 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.



கோவை: கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிர்மலா கல்லூரியில் தமிழ்நாடு சிறுதானிய மாநாடு - 2023 இன்று துவங்கியது.



இந்த மாநாட்டை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார். மாநாட்டில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் சிறுதானிய உணவுகள், உணவு பொருட்கள், சிறுதானியம், மருத்துவ குணம் சார்ந்த புத்தகங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.



மேலும் 7 சிறுதானியங்களை கொண்டு 555 வகையான சிறுதானிய உணவுகளை தயாரித்து, உணவு கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதில் சிறுதானியங்களை கொண்டு 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



இதைத் தொடர்ந்து கல்லூரி கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், சித்த மருத்துவர் சிவராமன், கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...