உடலுக்கு வலுவூட்டும் 555 சிறுதானிய உணவுகள் - கோவையில் தொடங்கியது சிறுதானிய மாநாடு!

கோவையில் தமிழ்நாடு சிறுதானிய மாநாட்டை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். சிறுதானியங்கள் மூலம் 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.



கோவை: கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிர்மலா கல்லூரியில் தமிழ்நாடு சிறுதானிய மாநாடு - 2023 இன்று துவங்கியது.



இந்த மாநாட்டை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார். மாநாட்டில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் சிறுதானிய உணவுகள், உணவு பொருட்கள், சிறுதானியம், மருத்துவ குணம் சார்ந்த புத்தகங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.



மேலும் 7 சிறுதானியங்களை கொண்டு 555 வகையான சிறுதானிய உணவுகளை தயாரித்து, உணவு கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதில் சிறுதானியங்களை கொண்டு 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



இதைத் தொடர்ந்து கல்லூரி கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், சித்த மருத்துவர் சிவராமன், கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...