உடலுக்கு வலுவூட்டும் 555 சிறுதானிய உணவுகள் - கோவையில் தொடங்கியது சிறுதானிய மாநாடு!

கோவையில் தமிழ்நாடு சிறுதானிய மாநாட்டை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். சிறுதானியங்கள் மூலம் 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.



கோவை: கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிர்மலா கல்லூரியில் தமிழ்நாடு சிறுதானிய மாநாடு - 2023 இன்று துவங்கியது.



இந்த மாநாட்டை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார். மாநாட்டில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் சிறுதானிய உணவுகள், உணவு பொருட்கள், சிறுதானியம், மருத்துவ குணம் சார்ந்த புத்தகங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.



மேலும் 7 சிறுதானியங்களை கொண்டு 555 வகையான சிறுதானிய உணவுகளை தயாரித்து, உணவு கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதில் சிறுதானியங்களை கொண்டு 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



இதைத் தொடர்ந்து கல்லூரி கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், சித்த மருத்துவர் சிவராமன், கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...