அண்ணாமலை குறித்து ஆபாச வீடியோ – கோவையில் பாஜகவினர் பரபரப்பு புகார்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து ஆபாச வார்த்தைகளால் பேசி வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் போத்தனூர் போலீஸில் புகார் அளித்தனர்.


கோவை: சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பத்திரிகையாளரிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளை வைத்து கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது தாயார் குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பு வகையிலும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.



இந்த காட்சிகள் வைரலான நிலையில், பாஜக மாநில தலைவர் மற்றும் தயார் குறித்து அவதூறான கருத்துகளையும், ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன், உள்ளிட்டோர் போத்தனூர் போலீஸில் புகார் மனு அளித்தனர்.

உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனிடையே சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பிய நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...