கோவையில் சுமைதூக்கும் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை டி.கே. காய்கறி மார்க்கெட் அருகே பீடி கேட்டதற்கு தர மறுத்த சுமை தூக்கும் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (52). இவர் கோவை பி.பி வீதியில் தங்கி, டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே. காய்கறி சந்தையில் சுமை தூக்கும் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மணிகண்டன் கடந்த 3ஆம் தேதி தண்டு மாரியம்மன் கோயில் அருகே படுத்திருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மணிகண்டனிடம் பீடி கேட்டதாக தெரிகிறது.

அதற்கு மணிகண்டன் மறுத்த நிலையில், அந்த நபர் அங்கிருந்த இரும்பு கம்பியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...