கோவையில் சுமைதூக்கும் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

கோவை டி.கே. காய்கறி மார்க்கெட் அருகே பீடி கேட்டதற்கு தர மறுத்த சுமை தூக்கும் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (52). இவர் கோவை பி.பி வீதியில் தங்கி, டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே. காய்கறி சந்தையில் சுமை தூக்கும் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், மணிகண்டன் கடந்த 3ஆம் தேதி தண்டு மாரியம்மன் கோயில் அருகே படுத்திருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மணிகண்டனிடம் பீடி கேட்டதாக தெரிகிறது.

அதற்கு மணிகண்டன் மறுத்த நிலையில், அந்த நபர் அங்கிருந்த இரும்பு கம்பியால் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், பெரிய கடை வீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...