மறைந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ திருமகன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் நேற்றைய தினம் மாரடைப்பால் உயிரிழந்தார்.



இந்நிலையில், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த திருமகன் உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோட்டுக்கு சென்றார்.

இதையடுத்து அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிவேந்தன், கே.என்.நேரு மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

கோவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோரும் முதல்வருடன் ஈரோடு சென்று திருமகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...