கோவை சின்ன தடாகம் அருகே போர்வெல் குழாய்களை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் - பரபரப்பு..!

சின்ன தடாகம் அருகே மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த போர்வெல் குழாய்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியான ஆனைகட்டி மாங்கரை வனப்பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

இங்குள்ள காட்டு யானைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது.

இதனிடையே தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் கடந்த 2 மாதங்களாக தினமும் இரவு நேரத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கோவை சின்ன தடாகம் பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்றிரவு புகுந்த காட்டு யானை அங்கிருந்த போர்வெல் குழாய்களை பிடுங்கி சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளன. இச்சம்பம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக விவசாய நிலங்களில் யானைகள் புகுவதை உடனடியாக தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...