நீலகிரி உதகையில் நடைபெற்ற கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை - பாரம்பரிய இசை, நடனத்துடன் நிறைவு

உதகை அடுத்த கோக்கால் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகையின் இறுதியில் பாரம்பரிய இசையுடன் அரங்கேறிய ‘ஆட்குப்ஸ்’ நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கோக்கால் கிராமத்தில் கோத்தர் இனத்தை சேர்ந்த 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிகழ்விற்கு முன்னதாக அந்த கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும் நடத்தப்படும் வர சாவு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் தங்களது கிராமத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்காமல், விரதம் இருந்து தினந்தோறும் பல்வேறு சடங்குகளை கடைபிடித்து அய்யனோர், அம்மனோர் பண்டிகைக்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 27ஆம் தேதி வழிபாடு செய்வதற்கு புதுப் பானை தயாரிக்க களிமண் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் களிமண்ணை தலை மீது சுமந்து சென்று, தங்கள் வீடுகளில் புது பானைகள், தட்டுகளை தயாரித்தனர்.

இந்நிலையில் புத்தாண்டன்று, சாமை அரிசி, அவரை மற்றும் நெய் ஆகியவற்றால் உணவு தயாரித்து குலதெய்வங்களுக்கு படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



அப்போது, கிராமத்தின் மைய பகுதியில் பாரம்பரிய உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து ஒன்று திரண்ட கோத்தர் இன மக்கள், தங்களது கலாச்சார இசையுடன் உற்சாகமாக நடனமாடினர்.



மேலும், 10 நாட்கள் நடைபெற்ற இந்த குல தெய்வ பண்டிகையின் இறுதியாக ஆண்கள் ராஜாக்களை போல தலைபாகையுடன் வேடமிட்டு ஆட்குப்ஸ் என்ற நடனம் அரங்கேற்றியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...