நீலகிரி உதகையில் நடைபெற்ற கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை - பாரம்பரிய இசை, நடனத்துடன் நிறைவு

உதகை அடுத்த கோக்கால் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகையின் இறுதியில் பாரம்பரிய இசையுடன் அரங்கேறிய ‘ஆட்குப்ஸ்’ நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கோக்கால் கிராமத்தில் கோத்தர் இனத்தை சேர்ந்த 120 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவில் திருவிழாவை கொண்டாடுவது வழக்கம்.

இந்த நிகழ்விற்கு முன்னதாக அந்த கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டும் நடத்தப்படும் வர சாவு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதனை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி முதல் தங்களது கிராமத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்காமல், விரதம் இருந்து தினந்தோறும் பல்வேறு சடங்குகளை கடைபிடித்து அய்யனோர், அம்மனோர் பண்டிகைக்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 27ஆம் தேதி வழிபாடு செய்வதற்கு புதுப் பானை தயாரிக்க களிமண் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் களிமண்ணை தலை மீது சுமந்து சென்று, தங்கள் வீடுகளில் புது பானைகள், தட்டுகளை தயாரித்தனர்.

இந்நிலையில் புத்தாண்டன்று, சாமை அரிசி, அவரை மற்றும் நெய் ஆகியவற்றால் உணவு தயாரித்து குலதெய்வங்களுக்கு படைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



அப்போது, கிராமத்தின் மைய பகுதியில் பாரம்பரிய உடைகள் மற்றும் அணிகலன்கள் அணிந்து ஒன்று திரண்ட கோத்தர் இன மக்கள், தங்களது கலாச்சார இசையுடன் உற்சாகமாக நடனமாடினர்.



மேலும், 10 நாட்கள் நடைபெற்ற இந்த குல தெய்வ பண்டிகையின் இறுதியாக ஆண்கள் ராஜாக்களை போல தலைபாகையுடன் வேடமிட்டு ஆட்குப்ஸ் என்ற நடனம் அரங்கேற்றியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...