கோவையில் குடித்துவிட்டு தகராறு - தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடித்துவிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் லூனா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது வீட்டின் முன் நேற்று முந்தினம் 4 பேர் குடித்துவிட்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். அதிகமாக சத்தமிட்டு கூச்சலிட்டதால், அவர்களை அன்புராஜ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நால்வரும், அன்புராஜை கடுமையாக தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றனர். காயமடைந்த அன்புராஜை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அன்புராஜின் கன்னத்தில் 3 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் அன்புராஜ் புகார் அளித்தார். இதன்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, அழகர்சாமி, பூபேஷ், ஸ்ரீராம் என 4 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...