கோவையில் குடித்துவிட்டு தகராறு - தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடித்துவிட்டு சத்தம் போட்டுக் கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்டவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் லூனா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது வீட்டின் முன் நேற்று முந்தினம் 4 பேர் குடித்துவிட்டு சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். அதிகமாக சத்தமிட்டு கூச்சலிட்டதால், அவர்களை அன்புராஜ் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நால்வரும், அன்புராஜை கடுமையாக தாக்கிவிட்டு தப்பித்துச் சென்றனர். காயமடைந்த அன்புராஜை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அன்புராஜின் கன்னத்தில் 3 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் அன்புராஜ் புகார் அளித்தார். இதன்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, அழகர்சாமி, பூபேஷ், ஸ்ரீராம் என 4 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...