இளைஞர்களிடையே சினிமா மோகம் மற்றும் போதை இல்லையென்றால் தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும் - கோவையில் பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல்

கோவை தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், மாணவர்களுடனான கலந்துரையாடலில், ஒரு அரசு சாராயத்திலிருந்து காசை பெற்று, மருத்துவத்துக்கு வழங்கினால், அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றார்.


கோவை: ஒரு அரசு, சாராயம் விற்பதில் இருந்து வரும் காசை கொண்டு, மருத்துவத்துக்கு வழங்குவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.



சினிமா மோகம் மற்றும் போதை ஆகியவற்றை எடுத்து விட்டாலே, தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும் என்று பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல் தெரிவித்துள்ளார்.



கோவை தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

கலந்துரையாடலின் போது, மாணவர் ஒருவரின் கேள்வக்கு பதிலளித்தவர், பெரும்பான்மையான இளைஞர்கள் யாரோ ஒருவர் நடிப்பதற்கு பெரிய கட் அவுட் வைத்து நேரத்தை வீணடிப்பதோடு, தாய் - தந்தை தரும் பணத்தை வீணடிப்பதாக பதில் அளித்தார்.



மேலும், பெரும்பான்மையான இளைஞர்கள் சினிமாவில் நடித்தால் அவர்களை பெரிய ஆளாக பார்ப்பதாகவும், சினிமாவில் நடித்து பிரபலமாகிவிட்டால் அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தமிழகத்தில் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கிறது.

இது மிகப்மிகப்பெரிய பலவீனம் என்று தெரிவித்தார்.

மேலும், அரசுக்கு நிதி தேவை என்றால் அதற்கு நிறுவனங்கள் தொடங்கி பணம் சம்பாதிக்கலாம் அரசு சாராயத்திலிருந்து காசை வாங்கி, மருத்துவத்துக்கு வழங்கினால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. 90% குற்றங்கள் நடப்பதற்கு மதுவும், போதையும் தான் காரணம். என்ன தான் அதை நியாயப்படுத்தினாலும், பாதிப்பு தான் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்தவர்.



சினிமா மோகம் மற்றும் போதை ஆகியவற்றை எடுத்து விட்டாலே, தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும். இவை இரண்டும் இருந்தும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது என்றால் இவை இல்லையென்றால் இந்திய வல்லரசாகி இருக்கும் என்று தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...