இளைஞர்களிடையே சினிமா மோகம் மற்றும் போதை இல்லையென்றால் தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும் - கோவையில் பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல்

கோவை தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், மாணவர்களுடனான கலந்துரையாடலில், ஒரு அரசு சாராயத்திலிருந்து காசை பெற்று, மருத்துவத்துக்கு வழங்கினால், அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றார்.


கோவை: ஒரு அரசு, சாராயம் விற்பதில் இருந்து வரும் காசை கொண்டு, மருத்துவத்துக்கு வழங்குவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.



சினிமா மோகம் மற்றும் போதை ஆகியவற்றை எடுத்து விட்டாலே, தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும் என்று பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல் தெரிவித்துள்ளார்.



கோவை தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் முத்துவேல், மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

கலந்துரையாடலின் போது, மாணவர் ஒருவரின் கேள்வக்கு பதிலளித்தவர், பெரும்பான்மையான இளைஞர்கள் யாரோ ஒருவர் நடிப்பதற்கு பெரிய கட் அவுட் வைத்து நேரத்தை வீணடிப்பதோடு, தாய் - தந்தை தரும் பணத்தை வீணடிப்பதாக பதில் அளித்தார்.



மேலும், பெரும்பான்மையான இளைஞர்கள் சினிமாவில் நடித்தால் அவர்களை பெரிய ஆளாக பார்ப்பதாகவும், சினிமாவில் நடித்து பிரபலமாகிவிட்டால் அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை தமிழகத்தில் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கிறது.

இது மிகப்மிகப்பெரிய பலவீனம் என்று தெரிவித்தார்.

மேலும், அரசுக்கு நிதி தேவை என்றால் அதற்கு நிறுவனங்கள் தொடங்கி பணம் சம்பாதிக்கலாம் அரசு சாராயத்திலிருந்து காசை வாங்கி, மருத்துவத்துக்கு வழங்கினால் அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. 90% குற்றங்கள் நடப்பதற்கு மதுவும், போதையும் தான் காரணம். என்ன தான் அதை நியாயப்படுத்தினாலும், பாதிப்பு தான் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்தவர்.



சினிமா மோகம் மற்றும் போதை ஆகியவற்றை எடுத்து விட்டாலே, தமிழ்நாடு எங்கேயோ போயிருக்கும். இவை இரண்டும் இருந்தும் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது என்றால் இவை இல்லையென்றால் இந்திய வல்லரசாகி இருக்கும் என்று தெரிவித்தார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...