பல்லடத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக பூமி பூஜை

பல்லடத்தில் புதிய அங்கன்வாடி மையம், பள்ளியில் கழிவறை கட்டடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம், அண்ணா நகரில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.



இந்நிலையில், புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணியை பல்லடம் எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



மேலும், அண்ணா நகரில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களுக்கு இருக்கைகள், மேசைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்காக கூடுதல் கழிவறை கட்டும் பணிக்கான பூமி பூஜையையும் துவக்கி வைத்தார். 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டும் பணிகள் துவங்கியது.



இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....