பல்லடத்தில் அங்கன்வாடி மையம் கட்டுவதற்காக பூமி பூஜை

பல்லடத்தில் புதிய அங்கன்வாடி மையம், பள்ளியில் கழிவறை கட்டடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம், அண்ணா நகரில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.



இந்நிலையில், புதிய அங்கன்வாடி மையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணியை பல்லடம் எம்எல்ஏ ஆனந்தன் தொடக்கி வைத்தார்.



மேலும், அண்ணா நகரில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர்களுக்கு இருக்கைகள், மேசைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து மங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்காக கூடுதல் கழிவறை கட்டும் பணிக்கான பூமி பூஜையையும் துவக்கி வைத்தார். 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவறை கட்டும் பணிகள் துவங்கியது.



இந்த நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...