கோவையில் வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 2 இளைஞர்கள் கைது

கோவையில் வீடு புகுந்து தம்பதியை தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை, செல்வபுரம் அருகே கீரைத்தோட்டம், பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி கலா உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது வீட்டுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், ராஜா மற்றும் கலா இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த குணசேகரன், தினேஷ் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், குணசேகரனின் சகோதரர் கார்த்திக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ராஜா மற்றும் கலா இருவரும் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும், அந்த முன்விரோதத்தில் தம்பதியை தாக்கியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...