கோவையில் வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 2 இளைஞர்கள் கைது

கோவையில் வீடு புகுந்து தம்பதியை தாக்கிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை, செல்வபுரம் அருகே கீரைத்தோட்டம், பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி கலா உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது வீட்டுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், ராஜா மற்றும் கலா இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பித்துச் சென்றனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த குணசேகரன், தினேஷ் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், குணசேகரனின் சகோதரர் கார்த்திக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை ராஜா மற்றும் கலா இருவரும் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும், அந்த முன்விரோதத்தில் தம்பதியை தாக்கியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...