சுபஸ்ரீ மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும் - கோவையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி.

சுபஸ்ரீ மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் பயிற்சிக்காக வந்த திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த சுபஸ்ரீ என்ற பெண் அங்கிருந்து வெளியேறி மாயமான நிலையில், நேற்று இருட்டு பள்ளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சுபஸ்ரீ யின் கணவர் பழனிக்குமார் இறந்து கிடப்பது சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்தார். இதனை அடுத்து சுபஸ்ரீ யின் உடலானது கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.



இந்நிலையில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுபஸ்ரீயின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சுபஸ்ரீயின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அவர்களது குடும்ப வழக்கத்திற்கு மாறாக சுபஸ்ரீ என் உடல் எரியூட்டப்பட்டது. இது கோவை மக்களிடையே மிக பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈஷாவில் தொடர்ந்து இதுபோன்று மர்ம மரணங்கள் நடைபெற்று வருகிறது.

எனவே தமிழக அரசு இது குறித்து ஈஷாவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சுபஸ்ரீயின் மரணம் குறித்து விசாரிக்க மாநில அரசு விசாரணை குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...