கோவையில் ‘கிரைண்டர்’ செயலி மூலம் ஓரினச்சேர்க்கையாளரை குறிவைத்து நடந்த வழிப்பறி - கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது..!

ஓரினச்சேர்க்கையை விரும்புபவர்களுக்கான கிரைண்டர் (grindr) செயலி மூலம் கோவையை சேர்ந்த நபரிடம் பழகி நேரில் வரவழைத்து, பணம், நகை, செல்போனை பறித்து சென்ற கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது.


கோவை: கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் ஓரினச்சேர்க்கையை விரும்புபவர்களுக்கான “கிரைண்டர்” (Grindr) என்ற செயலியில் கணக்கை தொடங்கி உள்ளார். இந்த நிலையில் இந்த செயலி வாயிலாக ராக்கி என்ற பெயரில் ஒருவர் அவருக்கு அறிமுகமானதாக தெரிகிறது.

கோவையை சேர்ந்த அந்த வாலிபருக்கும் , செயலியில் அறிமுகமான ராக்கி என்ற வாலிபருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு கொண்ட அந்த 30 வயது வாலிபரை புத்தாண்டையொட்டி சந்திக்கலாம் என ராக்கி கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை சரவணம்பட்டி அருகே ஆளில்லா கட்டிடத்திற்கு வரச் சொல்லி தனிமையில் இருட்டில் சந்திக்கலாம் என ராக்கி தெரிவித்துள்ளார். இதனை நம்பி வந்த அந்த அப்பாவி வாலிபரை இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்துள்ளனர்.

அப்போது அந்த நான்கு பேரும் அந்த வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி, தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, ராக்கி என்ற பெயரில் செயலில் பேசிய நபர் போலி என்பது தெரியவந்தது. ராக்கி என்ற பெயரில் அறிமுகமான ஓரினச்சேர்க்கை போர்வையில் பணம் பொருளை கொள்ளையடிக்க கொள்ளை கும்பல் செய்த திட்டமிட்ட சதி என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், விசாரணையில் பிடிபட்ட நபர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் (27) ராக்கி என செயலில் அறிமுகமான நபர்.

மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாரிச் செல்வம் (23), மற்றும் தனியார் கல்லூரி விடுதியில் படித்து வரும் திருச்சியை சேர்ந்த அபிராம் (19), கொடைக்கானலை சேர்ந்த ஹரி விஷ்னு (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வழிப்பறி செய்த செல்போன், உள்ளிட்ட பொருட்கள் சரவணம்பட்டி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. ஓரினச்சேர்க்கைக்காக வந்த நபரை கத்தியை காட்டி பணம் பறித்த வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது போன்ற செயலியில் அறிமுகமாகும் நபர்கள் மீது ஆசை காட்டி மோசத்தை அரங்கேற்றுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...