கோவையில் எஸ்.பி.ஐ வங்கி ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பியோட்டம்..!

கோவை சிட்கோ பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னல் கம்பிகளை ஆக்ஸார் பிளேடு மூலம் இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே செல்ல முயன்றதும், அப்போது அலராம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சிட்கோ பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ) நேற்று முன் தினம் வழக்கம் போல வங்கி மேலாளர் முன்னிலையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வங்கி மூடப்பட்டது.



இதையடுத்து மீண்டும் நேற்று காலை வழக்கம் போல் உதவி மேலாளர் வங்கியை திறந்துள்ளார். அப்போது, உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் இருந்த இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே சென்ற மர்ம நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் உடனடியாக போத்தனூர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார், ஜன்னலில் பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை பதிவுச் செய்தனர். மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், வங்கிக்கு திருட வந்த மர்ம நபர்கள் ஆக்ஸார் பிளேடு மூலம் இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே செல்ல முயன்றதும், அப்போது அலராம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே பகுதியில், தொழிற்பேட்டை அமைந்துள்ளதால் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...