கோவையில் எஸ்.பி.ஐ வங்கி ஜன்னலை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பியோட்டம்..!

கோவை சிட்கோ பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னல் கம்பிகளை ஆக்ஸார் பிளேடு மூலம் இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே செல்ல முயன்றதும், அப்போது அலராம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை சிட்கோ பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ) நேற்று முன் தினம் வழக்கம் போல வங்கி மேலாளர் முன்னிலையில், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வங்கி மூடப்பட்டது.



இதையடுத்து மீண்டும் நேற்று காலை வழக்கம் போல் உதவி மேலாளர் வங்கியை திறந்துள்ளார். அப்போது, உள்ளே சென்று பார்த்த போது வங்கியில் இருந்த இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே சென்ற மர்ம நபர்கள் திருட முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் உடனடியாக போத்தனூர் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார், ஜன்னலில் பதிவான கைரேகை உள்ளிட்ட தடயங்களை பதிவுச் செய்தனர். மேலும், வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், வங்கிக்கு திருட வந்த மர்ம நபர்கள் ஆக்ஸார் பிளேடு மூலம் இரும்பு ஜன்னலை வெட்டி உள்ளே செல்ல முயன்றதும், அப்போது அலராம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.

வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே பகுதியில், தொழிற்பேட்டை அமைந்துள்ளதால் எப்பொழுதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள வங்கியை கொள்ளையடிக்க முயற்சித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...