திருப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயான வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

உடுமலை அடுத்த இலுப்ப நகரில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உட்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த இலுப்பநகர் பகுதியில் ஏராளமான ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மயான வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மயான வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இலுப்ப நகர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...