திருப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயான வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

உடுமலை அடுத்த இலுப்ப நகரில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உட்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த இலுப்பநகர் பகுதியில் ஏராளமான ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மயான வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மயான வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இலுப்ப நகர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...