திருப்பூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயான வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

உடுமலை அடுத்த இலுப்ப நகரில் மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உட்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட, அருந்ததியர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த இலுப்பநகர் பகுதியில் ஏராளமான ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மயான வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



இந்நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மயான வசதி மற்றும் அடிப்படை வசதிகள் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்த மனுவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இலுப்ப நகர் பகுதி மக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...