கோவையில் ஷேர் மார்க்கெட்டில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்து பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை - குடும்பத்தார் சோகம்

கோவையில் ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்து பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கண்ணன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சம்பத்குமார். எலக்ட்ரானிக் கடையில் ஒன்றில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த இவர், தனது சேமிப்பில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை குடும்பத்தாருக்கு தெரியாமல் ஆன்லைன் மூலம் ஷேர் டிரேடிங்கில் முதலீடு செய்திருந்தார்.

ஆனால் முதலீடு செய்த பணத்தில் இருந்து சம்பத் குமாருக்கு முறையாக லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்த சம்பத்குமார் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததனால் குடும்பத்தாரிடம் சொல்லாமல் பரிதவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விபரீத முடிவு எடுத்த சம்பத்குமார் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயன்றுள்ளார். அவருக்கு அதிகளவிலான வாந்தி, மயக்கம் ஏற்பட்ட பின், அவரது மனைவியிடம் தான் பூச்சி மருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பத்குமாரை அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சம்பத்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் மூலம் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்து நஷ்டத்தை சந்தித்ததால், பூச்சி மருந்து குடித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பத்குமாருக்கு மனைவி மற்றும் ஒரு கை குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்வது என்பது ஒரு பிரச்சனைக்கான தீர்வல்ல. எனவே, எந்தப் பிரச்னையாக இருந்தாலும் மனம் விட்டு பேசி, தகுந்த ஆலோசனை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை கட்டமைப்பது சாத்தியமே.

தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள்:

தற்கொலைத் தடுப்பு மையம் - 104

சினேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345.

பெண்களுக்கான தீர்வு மையம் - 109.

Newsletter

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...