கோவையில் இடம் வாங்கி வீட்டுமனை கட்டி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த தம்பதிகள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்…!

மீனா எஸ்டேட் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்த தம்பதிகள், இடம் வாங்கி வீடு கட்டித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வழக்கில் சிறையில் உள்ள நிலையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: கோவை ராமநாதபுரம் மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாத் சிங் (41), இவரது மனைவி கலைவாணி (38). இருவரும், கியூப் ஸ்கோயர் கன்ஸ்ட்ரெக்சன் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.

இடம் வாங்கி வீடி கட்டி தருவதாக கூறி கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த தனியார் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலரிடம், பல லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தனர். இது குறித்து புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ஜெகநாத் சிங்கை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது அவர்கள் மேலும பலரை ஏமாற்றியதும், முன் பணமாக ரூ.20 லட்சம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அதனை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதனிடையே, ஜெகநாத்சிங் மற்றும் கலைவாணி ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரில், இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

ஏற்கனவே, சிறையில் உள்ள இருவருக்கும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆணை நகலை காவலர்கள் வழங்கினர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...