உதகையில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள் - தாவரவியல் பூங்காவை காண ஆர்வம்

நீலகிரி மாவட்டம் உதகையில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வரும் நிலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை ஆர்வமாக கண்டு ரசித்து வருகின்றனர்.



நீலகிரி: தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முக்கிய சுற்றுலா தளமான உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக கர்நாடகா, கேரளா மாநிலங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகையின் காரணமாக உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான படகு நிலையம், தாவரவியல் பூங்கா, பைக்காரா, Seventh Mile, தொட்டபெட்டா ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டி வருகிறது.



காலை வேளைகளிலேயே நிலவும் மூடு பனி மற்றும் சாரல் மழையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், உதகை ஒரு மினி காஷ்மீர் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பரந்த புல்வெளிகள் நிறைந்த உதகை தாவரவியல் மற்றும் ரோஜா பூங்காவை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.



தற்போது நீலகிரி மாவட்டத்தில் சீசன் டைம் என்றாலும், கடும் மூடுபனி, அவ்வப்போது மழை அதனுடன் கடும் குளிர் நிலவி வருவதால், பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வரவு சற்று குறைவாகவே இருக்கும்.

பொதுவாக இந்த சீசனில், கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தான் அதிகம் இந்த கடும் குளிரான சீதோஷ்ண நிலையை ரசிக்க அதிகம் வருவார்கள் என்று தாவரவியல் பூங்கா அருகே கேரட், மக்காச்சோளம் கடலை ஆகிய உணவு பொருட்களை விற்று வரும் சாலையோர வியாபாரிகள் கூறுகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி, உதகையில், அதிகப்படியான 22.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சமாக 12.3°C பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் 10 டிகிரிக்கும் கீழே குளிர் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...