உதகையில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாத சுற்றுலா பயணிகள் - தாவரவியல் பூங்காவை காண ஆர்வம்

நீலகிரி மாவட்டம் உதகையில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வரும் நிலையில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களை ஆர்வமாக கண்டு ரசித்து வருகின்றனர்.



நீலகிரி: தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முக்கிய சுற்றுலா தளமான உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக கர்நாடகா, கேரளா மாநிலங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகையின் காரணமாக உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான படகு நிலையம், தாவரவியல் பூங்கா, பைக்காரா, Seventh Mile, தொட்டபெட்டா ஆகிய இடங்கள் சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டி வருகிறது.



காலை வேளைகளிலேயே நிலவும் மூடு பனி மற்றும் சாரல் மழையை ரசிக்கும் சுற்றுலா பயணிகள், உதகை ஒரு மினி காஷ்மீர் போல் காட்சியளிப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பரந்த புல்வெளிகள் நிறைந்த உதகை தாவரவியல் மற்றும் ரோஜா பூங்காவை காண சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.



தற்போது நீலகிரி மாவட்டத்தில் சீசன் டைம் என்றாலும், கடும் மூடுபனி, அவ்வப்போது மழை அதனுடன் கடும் குளிர் நிலவி வருவதால், பெரும்பாலும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வரவு சற்று குறைவாகவே இருக்கும்.

பொதுவாக இந்த சீசனில், கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தான் அதிகம் இந்த கடும் குளிரான சீதோஷ்ண நிலையை ரசிக்க அதிகம் வருவார்கள் என்று தாவரவியல் பூங்கா அருகே கேரட், மக்காச்சோளம் கடலை ஆகிய உணவு பொருட்களை விற்று வரும் சாலையோர வியாபாரிகள் கூறுகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி, உதகையில், அதிகப்படியான 22.5 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்சமாக 12.3°C பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் 10 டிகிரிக்கும் கீழே குளிர் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...