தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலைகளை தமிழக அரசு எடுத்து நடத்திட வேண்டும் - கோவை ஆட்சியரிடம் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை மனு

மூடப்பட்டுள்ள தேசிய பஞ்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும், தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகளை தமிழக அரசு எடுத்து நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 12 தொழிற்சங்கங்களின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.



கோவை: நாடு முழுவதும் உள்ள என்டிசி தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்ட "சேவ் என்டிசி” இயக்கம், என் டி சி ஆலைகளை மீண்டும் இயக்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவை அடங்கும்.



இந்த நிலையில், 12 தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரின் கேம்ப் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

அப்போது இது குறித்து தெரிவித்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், நாடு முழுவதும் உள்ள 23 NTC ஆலைகளில், தமிழ்நாட்டில் கோவையில் 5 ஆலைகளும், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ஒரு ஆலையும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில் ஒரு ஆலையும் இயங்கி வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆலைகள் இயங்கிட தடை விதிக்கப்பட்டது.



பின்னர் மீண்டும் தொழிற்சாலைகளை இயக்கிட மத்திய மாநில அரசுகள் உத்தரவு வழங்கிய பிறகும், NTC- ஆலைகள் மட்டும் தொடர்ந்து மூடப்பட்டு கடந்த 31- மாதங்களாக தொழிலாளர்களின் அடிப்படை வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை எம் பி சி தொழிலாளர்கள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆலைகளை மீண்டும் திறக்க வலியுறுத்திதமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தியிடம் 2 முறை மனு, துறை செயலாளர், NTC-CMD ஆகியோரை 4 முறை சந்தித்து மனு, சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பில் மனு அளித்தும் இதுவரை எந்த பலனும் இல்லை.

எனவே, இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி அவர் மூலம் தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகளை தமிழக அரசு எடுத்து நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைக்கிறோம் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இனியும் தாமதிக்காமல், தமிழக அரசு விரைவாக தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகளை எடுத்து நடத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...