நீலகிரி கூடலூரில் மளிகை கடையில் இருந்து ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் - உரிமையாளர் கைது

கூடலூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர் முருகானந்தம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அதே பகுதியில் மளிகை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூடலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அங்கு சென்ற கூடலூர் டி.எஸ்.பி மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் முருகானந்தத்தின் கடை மற்றும் குடோனில் சோதனை செய்தனர். அப்போது, மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, மளிகை கடை உரிமையாளர் முருகானந்தத்தை கைது செய்த போலீசார் அவரை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.1.25 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...