'அதிமுக உட்கட்சி பிரச்சனையில், மற்ற கட்சிகள் தலையிட முடியாத சூழல் உள்ளது' ம.ஜ.க கோவை மாவட்ட செயலாளர்.


அதிமுக கட்சியின் நிலைபாடு குறித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி  சிம்ப்ளிசிட்டி'க்கு அளித்த சிறப்பு பேட்டியில், மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ் கூறுகையில்:

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது, அதற்கு மற்ற கட்சிகள் தலையிட முடியாத சூழல் உள்ளது. மனிதநேய ஜனநாயக கட்சி பொறுத்தவரை மாநில தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதற்கேற்பதான் முடிவு செய்ய முடியும். அதிமுக கட்சியின் பொது செயலாளர் சசிகலாவிற்கு தற்போது மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும், தமிழகத்திற்கு முதலைவராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டால் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதன் மூலம் மக்களின் எதிர்ப்பில் இருந்து விடுபடலாம். உதாரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி தமிழகத்தில் படிப்படியாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதை சசிகலா பதவியேற்றால் முழுமையாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற நல்ல முயற்சியை செய்வதன் மூலம் தமிழக மக்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. 

தற்போது கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதன் மூலம் அதிமுக பொது செயலாளர் சசிகலா தமிழகத்திற்கு முதலமைச்சராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு சசிகலா தமிழக முதல்வராக பதவி வகித்தால் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...