மின் சிக்கன வாரம்: திருப்பூர் பல்லடத்தில் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மின்சார வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்று, பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.



திருப்பூர்: மின்சார வாரியம் சார்பில் டிசம்பர் மாதத்தில் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டது. இதில், மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.



அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.



பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது, உடுமலை சாலையில் உள்ள மின்சார அலுவலகத்தில் நிறைவடைந்தது.



இந்த பேரணியில், வீடுகளில் தேவையில்லாத நேரங்களில் இயங்கும் மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை நிறுத்தி வைக்க வேண்டும். இரவு முழுவதும் மின் விளக்கை எரிய வேண்டிய இடத்தில் குறைந்த பல்புகளை பொருத்த வேண்டும், தண்ணீர் சூடேறிய உடன் உடனடியாக வாட்டர் ஹீட்டரை அணைக்க வேண்டும்.

தூங்குவதற்கு முன்பும், வெளியில் செல்லும் போதும் தேவையில்லாத அனைத்து மின் சாதனங்களையும் அணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



இந்தப் பேரணியில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...